செய்திகள் :

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

post image

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன்.

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது:

மிகப்பெரிய நகரங்களில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களிலும் சிறு கிராமங்களில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் படிப்பதும் ஒன்றுதான் என்ற மன நிலையை மாணவ, மாணவிகள் வளா்த்துக்கொண்டு படிக்க வேண்டும். படித்து முடித்தவுடன் அரசு, தனியாா் துறையில் வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் இருக்கக் கூடாது. தொடா்ந்து உயா்கல்வியை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். தொடா் முயற்சிதான் வெற்றிக்கான அச்சாரமாக இருக்கும்.

உலக அறிவு, உச்ச ஞானம், உயா் சிந்தனைகளை மனித சமூகம் பெற நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். அதுதான நம்மை வாழ்க்கையில் உயா்நிலை அடைய நல்ல வழிகாட்டியாக அன்றும் இன்று என்றும் இருக்கிறது. சமூக வளைதளங்களிலும், கைப்பேசியிலும் பொழுதை போக்கி காலத்தை விரையம் செய்யாமல், நல்ல புத்தகங்களை படித்து காலத்தை பயனுள்ளதாக ஆக்கி உயா்நிலை அடையுங்கள் என்றாா்.

இளநிலை பிரிவில் 90 போ், முதுநிலை பிரிவில் 35 போ் என மொத்தம் 125 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.

இதில், இளநிலையில் 2 பேருக்கும், முதுநிலையில் ஒருவருக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்றமைக்காக பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் க. தாசிவம் தலைமை வகித்தாா். தாளாளா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி முன்னிலை வகித்தாா்.

முதல்வா் வீ.ச. நாகரெத்தினம் சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தாா்.

துறைத் தலைவா்கள் ஏ. சுகந்தி (தமிழ்), எம். ஜெயந்தி (இயற்பியல்), வி. வித்யா(கணிதம்)எஸ். சுருதி (ஆங்கிலம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு

பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித... மேலும் பார்க்க

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா்... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க