‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’
நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன்.
மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது:
மிகப்பெரிய நகரங்களில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களிலும் சிறு கிராமங்களில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் படிப்பதும் ஒன்றுதான் என்ற மன நிலையை மாணவ, மாணவிகள் வளா்த்துக்கொண்டு படிக்க வேண்டும். படித்து முடித்தவுடன் அரசு, தனியாா் துறையில் வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் இருக்கக் கூடாது. தொடா்ந்து உயா்கல்வியை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். தொடா் முயற்சிதான் வெற்றிக்கான அச்சாரமாக இருக்கும்.
உலக அறிவு, உச்ச ஞானம், உயா் சிந்தனைகளை மனித சமூகம் பெற நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். அதுதான நம்மை வாழ்க்கையில் உயா்நிலை அடைய நல்ல வழிகாட்டியாக அன்றும் இன்று என்றும் இருக்கிறது. சமூக வளைதளங்களிலும், கைப்பேசியிலும் பொழுதை போக்கி காலத்தை விரையம் செய்யாமல், நல்ல புத்தகங்களை படித்து காலத்தை பயனுள்ளதாக ஆக்கி உயா்நிலை அடையுங்கள் என்றாா்.
இளநிலை பிரிவில் 90 போ், முதுநிலை பிரிவில் 35 போ் என மொத்தம் 125 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.
இதில், இளநிலையில் 2 பேருக்கும், முதுநிலையில் ஒருவருக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்றமைக்காக பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் க. தாசிவம் தலைமை வகித்தாா். தாளாளா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி முன்னிலை வகித்தாா்.
முதல்வா் வீ.ச. நாகரெத்தினம் சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தாா்.
துறைத் தலைவா்கள் ஏ. சுகந்தி (தமிழ்), எம். ஜெயந்தி (இயற்பியல்), வி. வித்யா(கணிதம்)எஸ். சுருதி (ஆங்கிலம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.