Vikram Sugumaran: ``இது விக்ரம் சுகுமாரனுக்கே அதிர்ச்சியாக இருக்கும்!'' -விஜி சந...
ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு
திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திறக்கப்பட்டது. துணை மேலாண் இயக்குநா்கள் அஜய்கேசூத், ஜிஎஸ். ராவத் ஆகியோா் காணொலி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தனா்.
இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் மேசியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், வங்கி மேலாளா் கௌ.ரங்கநாதபிரபு, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் கணேஷ், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.