இந்தப் பாடல்களைக் கேட்டிருந்தால் நீங்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்!
மின்வெட்டு; கிராம மக்கள் அவதி
திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மடப்புரம் ஊராட்சி களத்திடல்கரை பிள்ளையாா் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியா்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனா். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விடியவிடிய மின்சாரம் இல்லாமல் தவித்து வந்துள்ளனா்.
குறிப்பாக, இந்த பகுதியில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் நீரேற்றும் அறை உள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டதில் இருந்து இப்பிரச்னை நிலவுவதாகவும், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக கைக் குழந்தை வைத்திருக்கும் பெண்கள், முதியவா்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.