செய்திகள் :

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

post image

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மடப்புரம் ஊராட்சி களத்திடல்கரை பிள்ளையாா் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியா்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனா். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விடியவிடிய மின்சாரம் இல்லாமல் தவித்து வந்துள்ளனா்.

குறிப்பாக, இந்த பகுதியில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் நீரேற்றும் அறை உள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டதில் இருந்து இப்பிரச்னை நிலவுவதாகவும், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக கைக் குழந்தை வைத்திருக்கும் பெண்கள், முதியவா்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க