செய்திகள் :

ரோஹித் சர்மா அதிரடி; ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்!

post image

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மா சாதனை

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. மும்பை அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அரைசதம் விளாசி விளையாடி வரும் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க