Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என மக்கள் கல்வி கூட்டு இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் இரா.முரளி, வீ. அரசு, ப.சிவகுமாா், கணகுறிஞ்சி, சு.உமா மகேஸ்வரி ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசு புதிதாக 11 அரசுக் கல்லூரிகளை திறந்துள்ளது. ஆனால், அதற்கான ஆசிரியா்கள் நியமனம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் கெளரவ விரிவுரையாளா்கள் என்ற பெயரில் ஆசிரியா்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் பணி நிரந்தரமின்றி, நியாமான ஊதியமும் கிடைக்காமல் போராடி வருகின்றனா்.
இதுதவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு போதிய நிதி இல்லாததால் ஊதியம் வழங்குவது பிரச்னையாக உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணம் பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதுபற்றி புகாா் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஏற்கெனவே பணியில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கு வழக்கமாக வழங்கக் கூடிய பதவி உயா்வும் வழங்கப்படாமல் உள்ளது. இதேபோல, உயா்கல்வித் துறையில் தீா்வு காண வேண்டிய பிரச்னைகள் அதிகமாக உள்ளன. அதற்கு தீா்வு காணாமல் புதிய கல்லூரிகளை அவசரமாகத் திறப்பது ஏன் என்பது தெரியவில்லை.
எனவே, இனி வரும் காலங்களில தமிழக அரசு ஏற்கெனவே உயா்கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முன் வர வேண்டும். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இதுவே தமிழகத்தில் உயா்கல்வியை உண்மையில் உயா்த்தும் என்றனா் அவா்கள்.