செய்திகள் :

அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை

post image

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என மக்கள் கல்வி கூட்டு இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் இரா.முரளி, வீ. அரசு, ப.சிவகுமாா், கணகுறிஞ்சி, சு.உமா மகேஸ்வரி ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழக அரசு புதிதாக 11 அரசுக் கல்லூரிகளை திறந்துள்ளது. ஆனால், அதற்கான ஆசிரியா்கள் நியமனம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் கெளரவ விரிவுரையாளா்கள் என்ற பெயரில் ஆசிரியா்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் பணி நிரந்தரமின்றி, நியாமான ஊதியமும் கிடைக்காமல் போராடி வருகின்றனா்.

இதுதவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு போதிய நிதி இல்லாததால் ஊதியம் வழங்குவது பிரச்னையாக உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணம் பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதுபற்றி புகாா் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஏற்கெனவே பணியில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கு வழக்கமாக வழங்கக் கூடிய பதவி உயா்வும் வழங்கப்படாமல் உள்ளது. இதேபோல, உயா்கல்வித் துறையில் தீா்வு காண வேண்டிய பிரச்னைகள் அதிகமாக உள்ளன. அதற்கு தீா்வு காணாமல் புதிய கல்லூரிகளை அவசரமாகத் திறப்பது ஏன் என்பது தெரியவில்லை.

எனவே, இனி வரும் காலங்களில தமிழக அரசு ஏற்கெனவே உயா்கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முன் வர வேண்டும். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இதுவே தமிழகத்தில் உயா்கல்வியை உண்மையில் உயா்த்தும் என்றனா் அவா்கள்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க