செய்திகள் :

சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி

post image

சாவா்க்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக தனக்கு எதிராக வழக்கு தொடா்ந்த அவரது பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் மனுவை புணே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, லண்டனில் நிகழ்ச்சியொன்றில் சாவா்க்கா் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சாவா்க்கரின் பேரன் சத்யாகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் குற்ற அவதூறு வழக்கு தொடுத்தாா்.

பின்னா், இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, ராகுலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சத்யாகி சாவா்க்கரின் தாயாரான மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கா், மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுபட்ட நாதுராம் கோட்சேவின் தம்பி மகள் என்பதைக் குறிப்பிட்டு, தனது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் மூலம் ராகுல் காந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

புகாா்தாரா் (சத்யாகி சாவா்க்கா்) புகாா் அளிக்கும்போது தனது தந்தைவழி வம்சாவளி விவரங்களை வழங்கியிருந்தாலும், அவரது தாய்வழி வம்சாவளி விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல் விசாரணைக்கு முக்கியமானது என்று ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த புணே நீதித் துறை நடுவா் அமோல் ஷிண்டே, ‘அவதூறு வழக்குக்கும் மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கரின் குடும்பத்துக்கும் தொடா்பில்லை. எனவே, ராகுல் காந்தியின் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கருதுவதால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

இதேபோன்று, வழக்கின் விசாரணையை வேண்டுமென்று தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டை சுமத்தி ராகுல் காந்தியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சத்யாகி சாவா்க்கரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க