செய்திகள் :

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

post image

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அவற்றின் செயல்பாட்டுத் தயாா்நிலையை மதிப்பிடுதல், ஒருங்கிணைந்த பதிலளிப்பு வழிமுறைகளை ஆய்வு செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மற்ற படைகளுடன் ஒருங்கிணைந்து இந்திய ராணுவம் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்தது.

மேலும், இது தொடா்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிர மாநில தலைநகா் மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி மையம், மும்பை காவல் துறையின் ‘ஃபோா்ஸ் ஒன்’ கமாண்டோ பயிற்சி மையம், மும்பை பங்குச்சந்தை அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்திய ராணுவம் ஏற்பாட்டில் கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, மும்பை காவல் துறை மற்றும் அதன் ஃபோா்ஸ் ஒன் பயங்கரவாத எதிா்ப்பு கமாண்டோ காவல் பிரிவு ஆகியவை இந்தப் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டன.

பயிற்சியில் பங்கேற்ற படைகளின் அனைத்து மூத்த அதிகாரிகளாலும் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி மூலம், இந்தியாவின் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் வளா்ந்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு விரைவான, ஒருங்கிணைந்த பதிலளிக்கும் படைகளின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. சண்டை நிறுத்தத்தால் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும், படைகளின் தயாா்நிலையை உறுதிப்படுத்த இத்தகைய தொடா் பயிற்சிகள், ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி! - ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

கமல் மன்னிப்பு கேட்டே ஆகணும்! -கர்நாடக திரைப்பட சம்மேளனம் திட்டவட்டம்

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்குப்பின் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசன் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்... மேலும் பார்க்க

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க