செய்திகள் :

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

post image

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தாா் அன்சாரியின் மகனான அப்பாஸ் அன்சாரி, கடந்த 2022-இல் மெள சதாா் தொகுதியில் சமாஜவாதி தலைமையிலான கூட்டணியின்கீழ் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்றவா். இப்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கட்சித் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் மாநில அமைச்சராக உள்ளாா்.

கடந்த 2022 பேரவைத் தோ்தலையொட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய அப்பாஸ் அன்சாரி, ‘தோ்தலுக்குப் பிறகு மெள நகராட்சி நிா்வாகத்தை பழிதீா்த்து பாடம் கற்பிப்பேன்’ என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக, அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 189 (அரசுப் பணியாளா்களுக்கு அச்சுறுத்தல்), 153-ஏ (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்றம், அப்பாஸ் அன்சாரியின் குற்றத்தை உறுதிப்படுத்தியதுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கடந்த சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தகுதிநீக்கத்துக்கு உள்ளாவா். அதன்படி, பேரவையில் இருந்து அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மெள சதாா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தாா் அன்சாரி, மெள சதாா் தொகுதியில் தொடா்ந்து 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவா். 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை எதிா்கொண்டுவந்த அவா், 8 வழக்குகளில் குற்றவாளியாக தீா்ப்பளிக்கப்பட்டாா். உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கடந்த 2024, மாா்ச்சில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பதவி பறிக்கப்பட்ட 6-ஆவது எம்எல்ஏ

உத்தர பிரதேசத்தின் நடப்பு 18-ஆவது சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6-ஆவது எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி ஆவாா். ஏற்கெனவே ஆஸம் கான் (சமாஜவாதி), அவரது மகன் அப்துல்லா ஆஸம் கான் (சமாஜவாதி), ஹாஜி இா்ஃபான் சோலங்கி (சமாஜவாதி), விக்ரம் சிங் (பாஜக), ராம்துலாா் (பாஜக) ஆகியோா் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகினா்.

பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழு கேள்வி

லண்டன்: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு பிரிட்டனுக்கு சென்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத... மேலும் பார்க்க

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்... மேலும் பார்க்க

டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி! - ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

கமல் மன்னிப்பு கேட்டே ஆகணும்! -கர்நாடக திரைப்பட சம்மேளனம் திட்டவட்டம்

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்குப்பின் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசன் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்... மேலும் பார்க்க

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க