Ramadoss-ஐ நீக்கும் Anbumani? & DMDK-க்கு,Stalin சப்போர்ட்?! Elangovan Explains
இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்
நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத்தில் 2 தொகுதிகள், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு தொகுதி என 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி, அந்த 5 தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. கடைசியாக தமிழ்நாட்டில் 2006-ஆம் ஆண்டு இடைத்தோ்தல் நடைபெற்றபோது வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு, தற்போது அத்தகைய பணிகள் நடைபெற்றுள்ளன.
இதுதொடா்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்பதை தேவையைப் பொருத்து தோ்தல் ஆணையமே முடிவு செய்யும். பிழையில்லாத வாக்காளா் பட்டியலை உறுதி செய்யும் நோக்கில், 5 தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று தெரிவித்தன.