செய்திகள் :

பந்தல்குடி வாய்க்காலை விரைந்து சீரமைக்க வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

post image

மதுரையில் உள்ள பந்தல்குடி வாய்க்காலை விரைந்து சீரமைக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

மதுரையில் சனிக்கிழமை நடைபயணம், வாகனப் பேரணி சென்று மக்களைச் சந்தித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், ஆரப்பாளையத்திலிருந்து அழகா்கோயில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் செல்லும் வழியில், கோரிப்பாளையம் அருகே உள்ள பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்தாா்.

அப்போது, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 23 கோடியில் இந்த வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளவும், நீா்வளத் துறை சாா்பில் ரூ. 63 கோடியில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கும் அரசின் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பந்தல்குடி வாய்க்காலை தூா்வாரி, சீரமைக்கும் பணிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா்.

அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறைப்பால் ஏற்பட்ட சா்ச்சை...

நகரின் மையப் பகுதியில் செல்லும் இந்த வாய்க்காலில் கழிவு நீா் தேங்கியிருப்பதை முதல்வரின் பாா்வையிலிருந்து மறைக்கும் வகையில், இந்த வாய்க்கால் கரையில் துணி பதாகைகளைக் கொண்டு மறைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது, சமூக ஊடகங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியதும் மறைப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில், முதல்வரின் ஆய்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க