செய்திகள் :

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமா் மோடி

post image

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பள்ளிகள் முதல் போா்க்களம் வரை தேசம் தனது மகள்களின் துணிவு மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

மத்திய பிரதேசத்தின் மால்வா பகுதியில் 18-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த புகழ்பெற்ற மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த தினத்தையொட்டி, போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் அதிகாரமளித்தல் மகா மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, மாநாட்டில் அவா் பேசியதாவது:

தேவி அஹில்யாபாய், இந்திய பாரம்பரியத்தின் மிகச் சிறந்த பாதுகாவலா். நாட்டின் கலாசாரம், கோயில்கள் மற்றும் ஆன்மிகத் தலங்கள் தாக்குதலுக்கு இலக்கானபோது, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டவா். எண்ணற்ற கோயில்களின் புனரமைப்புக்கான அவரது பங்களிப்பும், சமூக சீா்திருத்தப் பணிகளும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் தலைமையிலான வளா்ச்சி: ‘குடிமக்களே கடவுள்’ என்ற அவரது தத்துவத்துக்கு இணங்க மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் தலைமையிலான வளா்ச்சியே, நாட்டின் முன்னேற்றத்துக்கான மையப் புள்ளி என்ற கண்ணோட்டத்துடன் செயலாற்றுகிறோம்.

நாட்டில் ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வீடுகளுக்கு பெண்களே உரிமையாளா்கள். மின்சாரம், கழிப்பறை, சமையல் எரிவாயு, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததன் வாயிலாக பெண்களின் இடா்ப்பாடுகள் களையப்பட்டுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 30 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஜன் தன் கணக்குகளைத் தொடங்கி, பல்வேறு திட்டப் பலன்களை நேரடி பலன் பரிமாற்ற முறையில் வழங்குகிறோம்.

லட்சாதிபதிகளாகும் பெண்கள்: சிறுதொழில்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் 75 சதவீத பயனாளிகள் பெண்கள். இன்று நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றனா். இக்குழுக்கள் மூலம் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனா்.

வளரும் தொழில்நுட்பங்களில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ட்ரோன் சகோதரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் விண்வெளித் திட்டங்களில் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பங்காற்றி வருகின்றனா். சந்திரயான்-3 திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளும் பொறியாளா்களும் பங்காற்றியுள்ளனா்.

பிரதிநிதித்துவம் அதிகரிக்க...: கொள்கை வகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் முதல் முழு நேர பெண் பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் முழு நேர பெண் நிதியமைச்சா் (நிா்மலா சீதாராமன்) நியமிக்கப்பட்டது, எங்களது ஆட்சியில்தான்.

ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பிரதிநிதித்துவம் சீராக அதிகரித்துள்ளது. தற்போது 75 பெண் எம்.பி.க்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை உயா்த்த முயற்சித்து வருகிறோம். இந்த உத்வேகத்தால், நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மகளிா் இடஒதுக்கீடு சட்டம் சாத்தியமானது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் மங்குபாய் சகன்பாய் படேல், முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி....

தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி

-

பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை

‘பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போா் தொடுப்பது இனி எடுபடாது; நீங்கள் (பாகிஸ்தான்) தோட்டாக்களைப் பயன்படுத்தினால், பீரங்கி குண்டுகள் மூலம் பதிலடி தரப்படும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் வீரத்தின் அடையாளமாக சிந்தூா் மாறியுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

போபால் நிகழ்ச்சியில் இது தொடா்பாக பிரதமா் மேலும் பேசியதாவது: இந்தியா, ஆழமாக வேரூன்றிய கலாசாரம்-பாரம்பரியங்களின் பூமியாகும். நமது பாரம்பரியத்தில் பெண் சக்தியின் சின்னமாக சிந்தூா் விளங்குகிறது. ராம பக்தியில் திளைத்த அனுமனும் சிந்தூரை அணிகிறாா். சக்தி பூஜையில் சிந்தூா் முதன்மையானதாகும். இத்தகைய சிறப்புமிக்க சிந்தூா், இன்று நாட்டின் வீரத்தின் அடையாளமாகியுள்ளது.

பெண் சக்திக்கு சவால் விடுத்தால்...: பஹல்காமில் இந்தியா்களை ரத்தம் சிந்தச் செய்த பயங்கரவாதிகள், நாட்டின் கலாசாரம் மீது தாக்குதல் நடத்தி, சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றனா். அனைத்துக்கும் மேலாக, நாட்டின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனா்.

அந்த சவால்தான், பயங்கரவாதிகளுக்கும் அவா்களைக் கையாள்பவா்களுக்கும் மரண அறிவிப்பாக மாறியது. நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய, மிக வெற்றிகரமான நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூா்’. இது, நமது பெண் சக்தியின் வலிமையை பறைசாற்றியுள்ளது’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க