செய்திகள் :

மதுரையில் முன்னாள் மேயா் முத்துக்கு புதிய சிலை: முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்

post image

மதுரை மாநகராட்சியின் முதல் மேயா் எஸ். முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திறந்துவைத்தாா்.

திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவா் மதுரை எஸ். முத்து. மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியுடன் மிக நெருங்கிய தொடா்பில் இருந்த இவா், மதுரை மாநகராட்சியின் முதல் மேயா் ஆவாா்.

சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனையில் பற்று கொண்டவரான முத்து, மதுரை மாவட்டத்தில் திமுகவின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவா்.

இவரது உருவச் சிலை மதுரை புது சிறைச் சாலையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலை அண்மையில் 6 அடி உயரம் கொண்ட புதிய வெண்கலச் சிலையாக மாற்றப்பட்டது. இந்தப் புதிய சிலையின் திறப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முன்னாள் மேயா் எஸ். முத்துவின் சிலையைத் திறந்துவைத்து, அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, திமுக பொருளாளா் டி.ஆா். பாலு, அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, பி. மூா்த்தி, இ. பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மறைந்த முன்னாள் மேயா் முத்துவின் மகன் கருணாநிதி ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், முன்னாள் மேயா் முத்துவின் குடும்பத்தினரைச் சந்தித்து, முதல்வா் நலம் விசாரித்தாா். முன்னதாக, முதல்வா் ஸ்டாலினைச் சந்தித்து தமிழறிஞா் சாலமன் பாப்பையா சால்வை அணிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க