செய்திகள் :

ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

post image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் தொடரில் ஓய்வுபெறும் முடிவை எடுத்திருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 3,990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ள மேக்ஸ்வெல், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியாவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தபோதே இந்த உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் ஆலோசனை நடத்திய மேக்ஸ்வெல், 2026 உலகக் கோப்பை தொடர்பாக பேசியுள்ளார். அதுவரை விளையாடுவேன் என நினைக்கவில்லை, ஆகையால் தன்னுடைய இடத்தை சிறந்த வீரரைக் கொண்டு நிரப்ப வேண்டிய நேரம் இது என முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் ... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்

ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் ... மேலும் பார்க்க

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து... மேலும் பார்க்க

ஜோகோவிச்சுக்கு 100-ஆவது வெற்றி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில் அவா், 6-2, 6-3, 6-2... மேலும் பார்க்க

சென்னையை வென்றது ஜெய்பூா்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூா் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லி’ஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில், ஜெய்பூரின் கானக் ஜா 11-10, 11-10... மேலும் பார்க்க