செய்திகள் :

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்டுமின்றி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்ட நிலையில், 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

பலம் வாய்ந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளும் குவாலிஃபையர் 2 ல் விளையாடவிருக்கிறது. இதனால், ஆர்சிபியுடன் விளையாடப் போவது யார்? என்பதில் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபிடி வில்லியர்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நேற்றிரவு மும்பை அணி சிறப்பாக விளையாடி குவாலிஃபையர் 2-க்குத் தகுதி பெற்றிருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணமாகும்.

விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சிறப்பானதாகும். இறுதிப் போட்டியைப் பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இந்தாண்டு ஆர்சிபி அணிக்கான ஆண்டாக உள்ளது” என்றார்.

இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!

ஐபிஎல் 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த... மேலும் பார்க்க

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ம... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 ... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க