அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்டுமின்றி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்ட நிலையில், 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
பலம் வாய்ந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளும் குவாலிஃபையர் 2 ல் விளையாடவிருக்கிறது. இதனால், ஆர்சிபியுடன் விளையாடப் போவது யார்? என்பதில் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபிடி வில்லியர்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நேற்றிரவு மும்பை அணி சிறப்பாக விளையாடி குவாலிஃபையர் 2-க்குத் தகுதி பெற்றிருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணமாகும்.
விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சிறப்பானதாகும். இறுதிப் போட்டியைப் பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இந்தாண்டு ஆர்சிபி அணிக்கான ஆண்டாக உள்ளது” என்றார்.
இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?