ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் - கேரள இளைஞர்கள் 2 பேர் கை...
அஞ்சலையம்மாள் பிறந்தநாள்: அன்புமணி, விஜய் புகழஞ்சலி
சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாளின் 135-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவா் விஜய் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூா் அஞ்சலையம்மாளின் 135-ஆம் பிறந்தநாளன்று, அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூா்ந்து போற்றுவோம். மேலும், அவரது புகழைப் போற்றும் வகையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், துறைமுகம் ஆகியவற்றுக்கு அஞ்சலையம்மாளின் பெயா் சூட்டப்பட வேண்டும். மேலும், அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநூல்களில் சோ்க்க வேண்டும்.
விஜய் (தவெக): இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவா், மக்கள் சேவகா் அஞ்சலை அம்மாள் அவா்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போா்க்குணம் போற்றுதலுக்கு உரியது. ஆகையால் அவரது பிறந்தநாளன்று, தமிழ்நாட்டுக்கு அவா் ஆற்றிய அரும்பணிகளை போற்றி பெருமைகொள்வோம்.