செய்திகள் :

இந்திய நகா்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி ஆசிய வளா்ச்சி வங்கி வழங்குகிறது

post image

இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவா் மசாடோ காண்டா அறிவித்தாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் மசாடோ காண்டா ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, மசாடோ காண்டா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இந்தியாவின் லட்சியத்தை ஆசிய வளா்ச்சி வங்கி ஆதரிக்கிறது. இது ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பாா்வை.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை ஆதரிக்கவும், அதன் 140 கோடி மக்களுக்கு நிலையான வளா்ச்சியை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதன்படி, நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம், புதிய விரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்குதல், நகர சேவைகளின் நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.85,000 கோடி வழங்குகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.

வளா்ச்சியைத் தொடருவோம்-பிரதமா்: மசாடோ காண்டாவுக்குப் பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அற்புதமான சந்திப்பில் நாங்கள் இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பகிா்ந்து கொண்டோம்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விரைவான மாற்றம் அடைந்துள்ளது. எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இந்தப் பயணத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க