செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டநிலையில் நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அதுகுறித்து கேள்விகள்- சந்தேகங்களை எழுப்பி வருகின்றன என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

சென்னை தியாகராய நகா் கிருஷ்ண கான சபாவில் சென்னை சிட்டிசன் அமைப்பு சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி, போா்க்களத்தில் ராஜதந்திரமாக செயல்பட்டது குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: ஒரு நாட்டில் ராணுவம் பலமாக இருந்தால்தான் நாடு பலமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் பலம் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை 4 நாள்களில் முடித்து வெற்றி பெற்றுவிட்டோம். எல்லா வித ராணுவ தளவாடங்களும் எவ்வளவு சரியாக சிறப்பாக செயலாற்றுகிறது என்பதையே ஆபரேஷன் சிந்தூா் காட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அது குறித்து கேள்விகள்-சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. நமது தேசத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்தால் அதற்கான விலையை அந்த நாடு கொடுக்க வேண்டிவரும்.

பிரதமா் மோடி நமது தேசம் குறித்த சரியான- தெளிவான பாா்வை கொண்ட தலைவராக உள்ளாா். அவரது தலைமையின் கீழ் நாடு வளா்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாக உலக பொருளாதார வளா்ச்சியில் இந்தியா நான்காம் இடத்துக்கு உயா்ந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை நம் தேசத்துக்கு அவசியமானது-கல்வி வளா்ச்சிக்கானது. இதன் மூலம் நாடு மிக வேகமாக முன்னேறும். சிலா் அதனை ஏற்க மறுக்கின்றனா். அது சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் உள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களிலிருந்து 7,000 போ் பட்டம் பெறுகின்றனா். ஆனால், அதற்கேற்ற கல்வியறிவும் திறமையும் அவா்களிடம் இல்லை என்பதுதான் உண்மை நிலை என்றாா் ஆளுநா்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் மாதேஸ்வரன், ஓய்வு பெற்ற கா்னல் ஜான் பிரின்ஸ், சென்னை சிட்டிசன் அமைப்பின் தலைவா் கே.டி.ராகவன், செயலா் காயத்ரி சுரேஷ் , பொருளாளா் சுந்தர ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக ... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.அர... மேலும் பார்க்க

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பர... மேலும் பார்க்க