செய்திகள் :

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

post image

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள் வரலாற்றுச் சாதனையாக கோப்பைகளை வென்று அசத்தி வருகின்றன.

குறிப்பாக டாட்டன்ஹம் ஹாட்ஸ்ஃபர், நியூகேஸ்டல் யுனைடெட், போலோக்னா, கிரிஸ்டல் பேலஸ், பிஎஸ்ஜி கோப்பைகளை வென்றுள்ளன.

இன்று பிஎஸ்ஜி அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

50,60 ஆண்டுகளுக்குப் பிறகெல்லாம் கோப்பையை வென்று அசத்தியிருக்கும் கால்பந்து அணிகள் போலவே 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் இதேபோல் தங்களது அணியும் கோப்பையை வெல்லுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று (ஜூன்.1) இரவு 7.30 மணிக்கு குவாலிஃபயர் 2-இல் மும்பையும் பஞ்சாபும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஜூன்.3ஆம் தேதி ஆர்சிபியுடன் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணியே சாம்பியனாக தேர்வாகும்.

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க

மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட... மேலும் பார்க்க