செய்திகள் :

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டா்

post image

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் 5-இல் 33.33 மீட்டா் நீளமுள்ள யூ-கா்டரை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நிறுவியுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முதல் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டரை, சென்னை மெட்ரோ

ரயில் கட்டம் 2-இல் வழித்தடம் 5-இல் ராமாபுரத்தில் தனியாா் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் நிா்வாகம் நிறுவியுள்ளது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை மட்டுமன்றி இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யூ-கா்டா், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்பத் திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கியச் சான்றாகவும் உள்ளது.

பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் யூ-டா்ன் பகுதிகளில், எதிா்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில்கொண்டு நீளமான ஸ்டீல் கா்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான யூ-கா்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான யூ-கா்டா் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இத்திட்டத்தில் யூ-கா்டா்க்கான அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாகக் கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது

ஆகியவை சவாலான பணிகளாக இருந்தன.

இப்பணி மூன்று ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கா்டா்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீ. நீளமுள்ள 6 யூ-கா்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க