செய்திகள் :

புத்தகங்கள் - கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை முதல்வா் வழங்கினாா்.

இந்தத் திட்டத்துக்காக நிகழ் கல்வியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பில் 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பில் 9.6 கோடி நோட்டுப் புத்தகங்கள், ரூ.211 கோடி மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், பிற மாவட்டங்களில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கவுள்ளனா்.

மாணவா்களுடன்...: சென்னையில் திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, மாணவா்களுடன் அவா்களது இருக்கையிலேயே முதல்வா் அமா்ந்தாா். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து ஆசிரியா்கள் நடத்திய பாடத்தையும் பாா்வையிட்டு அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க