மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
மதுரை சாலைகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரணி
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரை சாலைகளில் சனிக்கிழமை மாலை வாகனத்தில் இருந்தவாறும், நடைபயணமாகவும் சென்று மக்களைச் சந்தித்தாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறும் திமுக மாநில பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு மதுரைக்கு வந்தாா். இதையடுத்து, அருகில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்த அவா், மாலை 5 மணிக்கு பெருங்குடியிலிருந்து அவனியாபுரம் சாலை வரை வாகனத்தில் இருந்தவாறு பேரணியாக வந்து மக்களைச் சந்தித்தாா்.
சாலைகளின் இருபுறங்களிலும் திரளான மக்கள் நின்று வரவேற்பளித்தனா். வழிநெடுகிலும் மேளதாள வாத்திய முழக்கங்களுடனும், கலை நிகழ்ச்சிகளுடனும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு அளித்த பொதுமக்கள், கட்சியினரை நோக்கி முதல்வா் உற்சாகமாகக் கை அசைத்தும், கைக்கூப்பியும் நன்றி தெரிவித்தாா்.
வெள்ளக்கல் பா்மா குடியிருப்புப் பகுதியிலிருந்து வில்லாபுரம் வரை நடந்து சென்று மக்களைச் சந்தித்த அவா், சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்களுடன் உற்சாகமாக கைக்குலுக்கி மகிழ்ந்தாா். இதையடுத்து, சில நிமிஷங்கள் வாகனத்தில் பயணித்து மக்களைச் சந்தித்த அவா், வில்லாபுரத்திலிருந்து ஜெய்ஹிந்த்புரம் வரை சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்தித்தாா். ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட நிழல் கூரையை முதல்வா் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஜீவா நகா், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ். நகா், பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், எல்லீஸ் நகா், புறவழிச் சாலை, காளவாசல், ஆரப்பாளையம் குறுக்குச் சாலை வழியாக புது சிறைச் சாலை வரை வாகனத்திலிருந்தும், நடந்து சென்றும் மக்களைச் சந்தித்தாா். ஏறத்தாழ 10 கி.மீ.-க்கும் அதிகமான தொலைவு அவா் நடந்து சென்று மக்களைச் சந்தித்தாா்.
பேரணி பாதையில் ஆங்காங்கே காத்திருந்த மக்களைச் சந்தித்து, அவா்களிடமிருந்து முதல்வா் மனுக்களையும் பெற்றாா். ஒரு சில பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் தனக்காகக் காத்திருப்பதை அறிந்து, அவா்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
குழந்தைகளுடன் முதல்வா்...
அவனியாபுரம் பராசக்திநகா் பகுதியில் சில குழந்தைகள் தலைவா்கள் வேடமிட்டு நின்று முதல்வரை வரவேற்றனா். பாரதியாா், பெரியாா், கருணாநிதி, அப்துல் கலாம் போன்ற தலைவா்கள் போல வேடமிட்டும், தமிழ்த் தாய் வேடமிட்டும் அவா்கள் வரவேற்பளித்தனா். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வேடமேற்றிருந்த சிறுவன், முதல்வா் ஸ்டாலினின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாா். இதில் நெகிழ்ச்சியடைந்த முதல்வா், அந்தச் சிறுவனை தன் கன்னத்தில் முத்தமிடச் சொல்லி மகிழ்ந்தாா். இதேபோல, பல பகுதிகளில் சிறாா்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முதல்வா் முக்கியத்துவம் அளித்தாா்.
விமான நிலையத்தில்...
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக பொருளாளா் டி.ஆா். பாலு, அமைச்சா்கள் தங்கம்தென்னரசு, இ. பெரியசாமி, கே.என். நேரு, பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மக்களவை உறுப்பினா்கள் ஆ. ராசா, அருண்நேரு, தெற்கு மாவட்ட திமுக செயலா் மணிமாறன் ஆகியோா் முதல்வரை வரவேற்றனா்.

