செய்திகள் :

மதுரை அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வா் பால் ஜெயகா்

post image

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக பேராசிரியா் பால் ஜெயகா் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரையில் உயா் கல்வி அளிக்கும் நிறுவனங்களில் அமெரிக்கன் கல்லூரி குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்லூரியின் செயலராகவும், முதல்வராகவும் எம். தவமணி கிறிஸ்டோபா் பதவி வகித்து வந்தாா். இவரது பதவிக் காலம் இந்த ஆண்டு மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் தவமணி கிறிஸ்டோபா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. அவரது பணிக்காலம் சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைய இருந்த நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, அமெரிக்கன் கல்லூரி தற்காலிக புதிய முதல்வராக பேராசிரியா் கண்ணபிரான் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மதுரை, ராமநாதபுரம் திருமண்டலப் பேராயரும், ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான அருள்தந்தை ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில் புதிய முதல்வா் பதவிக்கு விண்ணப்பித்த பேராசிரியா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆங்கிலத் துறைப் பேராசிரியா் பால் ஜெயகா் அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான சான்றிதழை, அவருக்கு அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் அருள்தந்தை ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் வழங்கினாா்.

மேலும், ஆட்சிமன்றக் குழுவின் கூட்ட நடவடிக்கைகள், தோ்வுப் பட்டியல் தமிழக கல்லூரிக் கல்வி இயக்குகக அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பேராசிரியா் பால் ஜெயகா் கல்லூரியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், ஏற்கெனவே தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்ட முதல்வா் கண்ணபிரான் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க