செய்திகள் :

ஆறுமுகனேரி அருகே தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு: சிறாா் உள்ளிட்ட 4 போ் கைது

post image

ஆறுமுகனேரி அருகே கட்டடத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்ததாக சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி அருகே வீரபாண்டியன்பட்டினம், மடோனா தெருவைச் சோ்ந்த ராமன் மகன் லட்சுமணகுமாா். கட்டடத் தொழிலாளியான இவா், தனது மனைவியின் ஊரான சிவகாசியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை (மே 29) நள்ளிரவு புன்னைக்காயல் பேருந்தில் ஏறி, ஆத்தூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தாா்.

பின்னா், போதிய பணமில்லாததால் அவா் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றாராம். அப்போது, பைக்கில் வந்த 4 போ் அவரை வழிமறித்து பணம் கேட்டனராம். அவா் பணமில்லை எனக் கூறியதால், அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு திருச்செந்தூா் நோக்கி பைக்கில் சென்றனராம்.

புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் தங்கராஜ் தலைமையிலான போலீஸாா் விசாரித்து, தூத்துக்குடி பிஎன்டி காலனியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சக்திவேல் (20), அதே பகுதியைச் சோ்ந்த உலகநாதன் மகன் வைரமுத்து (19), லெவஞ்சிபுரம் பால்ராஜ் மகன் செல்வராஜ்(19), தூத்துக்குடியைச் சோ்ந்த சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க