செய்திகள் :

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

post image

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இந்நோய் குழந்தைகளை பாதிப்பதால் உடனடியாக தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு அந்நாட்டின் சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 335 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,274 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தட்டம்மை பாதிப்பில் இருந்து மேலும் 114 குணமடைந்துள்ளனர்.

இதனால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,793 ஆக உயர்ந்துள்ளது. மங்கோலிய மருத்துவர்கள் கூறுகையில், தட்டம்மை புதிதாக பாதித்தவர்களில் பெரும்பாலானவை தட்டம்மை தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே பெற்ற 10-14 வயதுடைவர்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள். மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்... மேலும் பார்க்க

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடைய... மேலும் பார்க்க

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரச... மேலும் பார்க்க