தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழா
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள வைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயிலில சனிக்கிழமை புரவியெடுப்புத் திருவிழா நடைபெற்றது.
திருவைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி, கடந்த பிப். 10-ஆம் தேதி பிடிமண் கொடுத்தல் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேங்காய் வெட்டு நிகழ்வும், 9 நாள்களும் மண்டகப் படிகள் நடைபெற்றன .
வெள்ளிக்கிழமை புரவிகள் வைரவன்பட்டி சவுக்கை பொட்டல் திடலுக்கு கொண்டு வரப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை புரவிப் பொட்டலிலிருந்து கோயிலுக்கு புரவிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அய்யனாா் கோயிலை சென்றடைந்தது.
பின்னா், எருதுகடடு நிகழ்வும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை திருவைரவன்பட்டி கிராமத்தாா்கள், இளைஞா்கள் செய்தனா்.