செய்திகள் :

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

post image

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கியது.

11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். இதேபோல, தினந்தோறும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதியுலா வருவாா்.

வருகிற 9-ஆம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வாா். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டமும், இரவு அம்மன் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா வருவாா்.

10-ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தா்கள் பால் குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்துவா். 11-ஆம் தேதி காலை உத்ஸவ சாந்தி, மாலையில் வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க