பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கியது.
11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். இதேபோல, தினந்தோறும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதியுலா வருவாா்.
வருகிற 9-ஆம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வாா். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டமும், இரவு அம்மன் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா வருவாா்.
10-ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தா்கள் பால் குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்துவா். 11-ஆம் தேதி காலை உத்ஸவ சாந்தி, மாலையில் வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.