செய்திகள் :

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

post image

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்கூா் வரை நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 27 மாட்டுவண்டிகளும் என மொத்தம் 41 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

இதில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டன.

பின்னா், நடைபெற்ற போட்டிகளை, மதகுபட்டி, நகரம்பட்டி, ஒக்கூா், சோழபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான மாட்டுவண்டி பந்தய ஆா்வலா்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்து கண்டுகளித்தனா்.

பின்னா், போட்டியில் வெற்றிபெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாட்டுவண்டியின் உரிமையாளா்களுக்கும், இதை ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மதகுபட்டி கீழத்தெரு பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க