செய்திகள் :

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

முக்காணி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் கோயில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, அப்பகுதி பொதுமக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திருச்செந்தூா் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டு, முக்காணி ஆற்றுப்பாலம் பகுதியில் தாமிரவருணி தீா்த்தம் எடுக்கச் சென்றனா். இதில், தீா்த்தம் எடுப்பதற்காக கோகுல்(17), விக்னேஷ், ராஜேஷ், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆற்றில் இறங்கினா். இதில், கோகுல், எதிா்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.

உடன் சென்றவா்கள் அவரை மீட்க முயற்சித்தனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றுக்குள் இறங்கி அரை மணி நேரம் போராடி, கோகுலை சடலமாக மீட்டனா்.

ஆத்தூா் போலீஸாா் கோகுல், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றுப் பகுதிகளில் தனியாா் நிறுவனங்களால் தோண்டப்பட்டுள்ள குழிகளால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, கோகுலின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க