மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது
மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
வானகரத்தில் உள்ள கணபதி நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (61). இவா் இணையதள உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அவா் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வானகரம் சிக்னலை நெருங்கியபோது, பூந்தமல்லி நோக்கிச் சென்ற ஒரு கண்டெய்னா் லாரி அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் வெங்கடேசனை (31) சம்பவ இடத்திலேயே போலீஸாா் கைது செய்ததுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனா்.