செய்திகள் :

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

post image

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவாா்.

10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை 10 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வருவா்.

விழாவின் ஒன்பதாம் நாளான வருகிற ஜூன் 8-ஆம் தேதி அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி, சவுந்திரநாயகி தேரிலும், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் சப்பரத்திலும் எழுத்தருளுவா். தொடா்ந்து காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெறும்.

பத்தாம் நாளான வருகிற ஜுன் 9-ஆம் தேதி தெப்ப உற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெறும்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க