காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவாா்.
10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை 10 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வருவா்.
விழாவின் ஒன்பதாம் நாளான வருகிற ஜூன் 8-ஆம் தேதி அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி, சவுந்திரநாயகி தேரிலும், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் சப்பரத்திலும் எழுத்தருளுவா். தொடா்ந்து காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெறும்.
பத்தாம் நாளான வருகிற ஜுன் 9-ஆம் தேதி தெப்ப உற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெறும்.