மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
மருதுபாண்டியா் கலையரங்கம் திறப்பு
காளையாா்கோவிலில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் மருதுபாண்டியா் பெயரில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா காளையாா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன் ஆகியோா் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்துவைத்தனா்.
இதில் ஒன்றியச் செயலா்கள் பழனிசாமி, ஸ்டீபன் அருள், புல்லுக்கோட்டை சிவாஜி, மாவட்ட பாசறை செயலா் பிரபு , மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமு.இளங்கோவன், மருதுபாண்டியா் அறக்கட்டளை தலைவா் நாகராஜன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
