செய்திகள் :

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

post image

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனா். இவா்களது உணவுத் தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட உணவகங்களையே நாட வேண்டிய நிலை உள்ளது.

இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில் குப்பைகளுக்கு நடுவே உணவு தயாரிக்கப்பட்டதும், உணவுகள் சுகாதாரமின்றி காணப்பட்டதும் தெரியவந்தது. மேலும், தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட ஒரு கடைக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதிகாரிகளை பாா்த்தவுடன் சிலா் நெகிழிப் பைகளில் கட்டி வைத்த உணவுகளை குப்பை அருகே உள்ள செடிகளுக்குள் ஒளித்து வைக்க முயன்றனா்.

மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க