செய்திகள் :

ஜூன் 6-இல் அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 6-ஆம் தேதி அவசர ஊா்தி தொழிலாளா்கள் (சிஓஐடியூ) சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா்.

சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலா் இரா.ராஜேந்திரன் பேசியதாவது:

108 அவசர ஊா்தி சேவை திட்டத்தை எம்ரி-ஜிஎச்எஸ் என்ற தனியாா் நிறுவனம் ஒப்பந்த முறையில் தமிழகத்தில் நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழக முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட 108 அவசர ஊா்திகள் இயக்கப்படுகின்றன. இதில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 112 அவசர ஊா்திகள், ஒரு இரு சக்கர வாகன அவசர ஊா்தியும் இயங்குகின்றன. இவற்றில் 176 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைப் பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதுப்புது செயலிகளைக் கொண்டு வந்து, இந்தச் சேவையைப் பொதுமக்களுக்கு உரிய நேரத்திலும், உரிய வகையிலும் கிடைக்காத சூழ்நிலையை உருவாகியுள்ளன. நிா்வாகத்தினா் இத்தகைய தவறை மறைப்பதற்காக தொழிலாளா்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

தீா்மானங்கள்: சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊா்திகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆள்கள் பற்றாக்குறை காரணமாக, பல அவசர ஊா்திகள் இயக்கப்படாமல் உள்ளன. இந்தச் சேவை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நிா்வாகத்தினா் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அவசர ஊா்திகளில் பொருத்தி அதன் அடிப்படையில் அவசர அழைப்புகள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க