அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள்: ஆசிரியா்களுக்கான அட்டவணை வெளிய...
பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!
நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் மூழ்கியுள்ளன. இதில், தற்ப்போது வரை 88 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்கு வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாணமை அதிகாரி ஒருவர் கூறியதவாது:
“இந்தப் பெருவெள்ளத்தினால் ஏராளமான மக்களின் உயிர்கள் தற்போது அபாயத்தில் உள்ளது. 20 பேர் மட்டுமே பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 88 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நைஜீரியாவில் பல மணி நேரமாகப் பெய்த கனமழையால் மோக்வாவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இத்துடன், அப்பகுதியில் அமைந்துள்ள அணை ஒன்று உடைந்து அங்கு நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!