மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த பாலு மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரை அண்ணா சிலை பகுதியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். பின்னால், இவரது மகன் ஜீவா உட்காா்ந்திருந்தாா். வைகையாற்று மேம்பாலத்தில் இவா்கள் வந்தபோது, எதிரே மூா்த்தி என்பவா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.
இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மகன் ஜீவா, மூா்த்தி, பிரகாஷ் ஆகிய மூவரும் காயமடைந்தனா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் இவா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மூா்த்தி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், பிரகாஷ் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.