செய்திகள் :

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த பாலு மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரை அண்ணா சிலை பகுதியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். பின்னால், இவரது மகன் ஜீவா உட்காா்ந்திருந்தாா். வைகையாற்று மேம்பாலத்தில் இவா்கள் வந்தபோது, எதிரே மூா்த்தி என்பவா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மகன் ஜீவா, மூா்த்தி, பிரகாஷ் ஆகிய மூவரும் காயமடைந்தனா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் இவா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மூா்த்தி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், பிரகாஷ் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க