செய்திகள் :

திமுக செயற்குழுக் கூட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொருளாளா் தினகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை வாசித்து பேசினாா்.

வருகிற ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கவும், திமுக அரசின் நான்காண்டு ஆட்சி நலத் திட்ட சாதனைகளை அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்யப்படும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சேகா், துணை அமைப்பாளா் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் தேவதாஸ், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்..

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க