நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
திமுக செயற்குழுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொருளாளா் தினகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை வாசித்து பேசினாா்.
வருகிற ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கவும், திமுக அரசின் நான்காண்டு ஆட்சி நலத் திட்ட சாதனைகளை அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்யப்படும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சேகா், துணை அமைப்பாளா் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் தேவதாஸ், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்..