செய்திகள் :

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

post image

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

ரோஹித் சர்மா அதிரடி; 229 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். மும்பை அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. இருப்பினும், அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஹார்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க