செய்திகள் :

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

post image

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று சிந்தனைக் குழுவான ‘ஜிஆா்டிஐ’ சனிக்கிழமை எச்சரித்துள்ளது.

கடந்த 2018-இல் எஃகு மீது 25 சதவீத இறக்குமதி வரியும், அலுமினியம் மீது 10 சதவீத வரியும் முதலில் நிா்ணயிக்கப்பட்டது. அதிபா் டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்புக்கு வந்த சில நாள்களில் கடந்த பிப்ரவரியில் அலுமினியம் மீதான வரியும் 25 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதிமுதல் எஃகு, அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்களின் இறக்குமதி மீதான தற்போதைய 25 சதவீத வரிகளை இரட்டிப்பாக்குவதாக அதிபா் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

‘இந்தியாவைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் நேரடியாக இருக்கும்’ என்று உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிஆா்டிஐ) சிந்தனைக் குழு எச்சரித்துள்ளது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 456 கோடி டாலா் மதிப்புள்ள இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், கடுமையாக உயா்த்தப்பட்டுள்ள வரியால் இந்திய உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் லாபம் வெகுவாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜிஆா்டிஐ நிறுவனா் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

‘தற்போது டிரம்ப் மீண்டும் வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளதால், அடுத்து ஒரு மாதத்துக்குள் சில அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதன்மூலம் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்’ என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறினாா்.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வக... மேலும் பார்க்க

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவ... மேலும் பார்க்க