செய்திகள் :

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

post image

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஆனால், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் எல்லையில் உள்ள பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முதல் வெடிவிபத்தில் பயணிகள் ரயிலின் மேல் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூா்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் ஒரு பாலம் வெடிவிபத்தால் இடிந்து விழுந்ததில் இரண்டாவது ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்துக்குள்ளான அந்த சரக்கு ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே செல்லும் சாலையில் விழுந்ததாக உள்ளூா் ஆளுநா் (பொறுப்பு) அலெக்சாண்டா் கின்ஷ்டீன் தெரிவித்தாா். இந்த விபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

கடந்த காலங்களில், உக்ரைன் படையினா் ரஷியாவின் ரயில்வே உள்கட்டமைப்புகளைத் தாக்கியிருப்பதாக சில அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனினும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரபூா்வ தகவல்கள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில், உக்ரைனின் ராணுவ உளவுத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உணவு மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு ரயில், கிரீமியாவுக்குச் செல்லும் வழியில் வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. ஆனால், இத்தாக்குதல் உக்ரைனால் நடத்தப்பட்டதா என்பது குறித்தும், பாலம் இடிந்து விழுந்துள்ளது குறித்தும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைனுக்குச் சொந்தமாக இருந்த கிரீமியாவை ரஷியா கடந்த 2014-இல் கைப்பற்றி, தனது பிராந்தியமாக அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க