செய்திகள் :

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

post image

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.

இருவரையும் ஜூன் 16-க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்தத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் என 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இதை மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று தெரிவித்து, வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயத்தில் ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன.

அவரின் அரசுக்கு எதிராகப் போராடியவா்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை ஷேக் ஹசீனா சூழ்ச்சியுடன் திட்டமிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கியதாக தீா்ப்பாயத்தில் அரசுத் தரப்பு ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டிய நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, ஷேக் ஹசீனா மற்றும் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிராக தீா்ப்பாயம் கைது ஆணை பிறப்பித்தது. இருவரையும் ஜூன் 16-க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க