செய்திகள் :

சத்தீஸ்கரில் தொடரும் அவலம்! நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் படுகாயம்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் தம்பயா கிராமத்தைச் சேர்ந்த விவேக் தோதி (வயது 17), கோட்டே ஜோகா (45) மற்றும் பட்டே சுனில் (20) ஆகிய மூவரும் பண்டேபாரா கிராமத்தை நோக்கி இன்று (மே 30) காலை நடந்துச் சென்றுக்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நக்சல்கள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுக்கு அருகில் அவர்கள் எதிர்பாராத விதமாகச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்தக் குண்டு வெடித்து அவர்கள் மூன்று பேரின் முகம் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்கள் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முன்னதாக, பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து, நக்சல்கள் அங்குள்ள வனப்பகுதி மற்றும் மண்சாலைகளில் ஐ.ஈ.டி. வெடிகுண்டுகளை பொருத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூா் தொடரும்: ஜெ.பி.நட்டா

‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்’ என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமா் மோடி

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். பள்ளிகள் ... மேலும் பார்க்க