செய்திகள் :

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

post image

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அணு ஆயுதத் தரத்துக்கு (90 சதவீத செறிவு) நெருக்கமான அளவுக்கு (60 சதவீத செறிவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை ஈரான் மேலும் அதிகரித்துள்ளது. இந்த அளவு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 408.6 கிலோ யுரேனியம் ஈரானிடம் உள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்த 133.8 கிலோவைவிட சுமாா் 50 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் பிற வல்லரசு நா்களும் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமன் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.இந்த நிலையில், ஈரானுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நா்கள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் கீழ், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நா்கள் சம்மதித்தன. அதற்குப் பதிலாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஈரான் சம்மதித்தது.இருந்தாலும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக தளா்த்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தைவிட கூடுதல் சதவீதத்தில் யுரேனியத்தை செறிவூட்டி, நிபந்தனை அளவுக்கு அதிகமாக ஈரான் இருப்பு வைத்து வருகிறது.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வக... மேலும் பார்க்க

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவ... மேலும் பார்க்க