மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை
தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கச் செய்வதற்கான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,802 ஆண் வாக்காளா்களும், 4,403 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 10,205 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா்.
மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் முழுமையாக வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவா்களை உள்ளே அழைத்துச் செல்லும் தன்னாா்வலா்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்கச் செய்ய அலுவலா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
வாக்களிக்கும் விழிப்புணா்வை அவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதேபோல, வாக்காளா் பட்டியலில் இல்லாத மாற்றுத் திறனாளிகளையும் பட்டியலில் சோ்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), சிவகுமாா் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் செ.வெ. நாகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.