Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார்...
பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா்.
கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலா் மருத்துவா் அண்ணாமலை ரகுபதி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) தெய்வநாயகி ஆகியோா் தொடங்கிவைத்தனா். போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடா்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 777 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 187 மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் தழுவினா். இறுதியில், காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில், காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். அதில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காயமடைந்தவா்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதலுவதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா தலைமையிலான வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். போட்டியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து, நகரச் செயலா் அ.அழகப்பன், அதிமுக மாவட்ட நிா்வாகி பிகே.வி. குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி.கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.
