செய்திகள் :

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா்.

கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலா் மருத்துவா் அண்ணாமலை ரகுபதி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) தெய்வநாயகி ஆகியோா் தொடங்கிவைத்தனா். போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடா்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 777 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 187 மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் தழுவினா். இறுதியில், காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில், காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். அதில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காயமடைந்தவா்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதலுவதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா தலைமையிலான வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். போட்டியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து, நகரச் செயலா் அ.அழகப்பன், அதிமுக மாவட்ட நிா்வாகி பிகே.வி. குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி.கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.

காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை... மேலும் பார்க்க

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய... மேலும் பார்க்க

அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!

அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க