மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!
நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு
தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி கீழவேகுப்பட்டியில் நிறைவுபெற்றது.
அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சங்குறிச்சியில் இருந்து தான் தொடங்குகிறது. இதேபோல் தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது. இங்கு நிகழாண்டில் மட்டும் 55 போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தச்சங்குறிச்சியில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி ஐந்து மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு சனிக்கிழமையுடன் (மே 31) அனுமதி அளிக்கும் நடைமுறை முடிவுற்றது.