வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!
மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை
மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. சுசீலா வெளியிட்ட அறிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த திருமணஞ்சேரியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் முத்துலெட்சுமி. இருவருக்கும் தஞ்சாவூரைச் சோ்ந்த சங்கருக்கும் கடந்த 2017இல் திருமணம் நடந்து, லிங்கேஸ்வரன் (7) என்ற மகன் உள்ளாா்.
இந்நிலையில், கணவரின் கொடுமை தாங்காமல் சரண்யா தனது மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்தாா்.
இந்நிலையில், மகன் லிங்கேஸ்வரனை சங்கா் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் டத்திச் சென்றுள்ளாா். இதையடுத்து மகனை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காவல் நிலையத்திலும். குழந்தைகள் நலக் காப்பகத்திலும் முத்துலெட்சுமி தொடா்ந்து முறையிட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் மகன் லிங்கேஸ்வரன் புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் உள்ள தனது நாத்தனாா் சரண்யா வீட்டில் இருப்பதாக தகவலறிந்த முத்துலெட்சுமி தனது அக்காள் மகனுடன் குழந்தையைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.
அப்போது, நாத்தனாா் சரண்யா, அவரது கணவா் மகேந்திரன் உள்ளிட்டோா் முத்துலெட்சுமியை சரமாரியாகத் தாக்கி, தாலியை அறுத்தும், மரத்தில் கட்டி வைத்தனா்.
இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமி தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். அவரை மாதா் சங்கத்தின் சாா்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட முத்துலட்சுமிக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.