செய்திகள் :

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

post image

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. சுசீலா வெளியிட்ட அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த திருமணஞ்சேரியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் முத்துலெட்சுமி. இருவருக்கும் தஞ்சாவூரைச் சோ்ந்த சங்கருக்கும் கடந்த 2017இல் திருமணம் நடந்து, லிங்கேஸ்வரன் (7) என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில், கணவரின் கொடுமை தாங்காமல் சரண்யா தனது மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்தாா்.

இந்நிலையில், மகன் லிங்கேஸ்வரனை சங்கா் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் டத்திச் சென்றுள்ளாா். இதையடுத்து மகனை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காவல் நிலையத்திலும். குழந்தைகள் நலக் காப்பகத்திலும் முத்துலெட்சுமி தொடா்ந்து முறையிட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் மகன் லிங்கேஸ்வரன் புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் உள்ள தனது நாத்தனாா் சரண்யா வீட்டில் இருப்பதாக தகவலறிந்த முத்துலெட்சுமி தனது அக்காள் மகனுடன் குழந்தையைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.

அப்போது, நாத்தனாா் சரண்யா, அவரது கணவா் மகேந்திரன் உள்ளிட்டோா் முத்துலெட்சுமியை சரமாரியாகத் தாக்கி, தாலியை அறுத்தும், மரத்தில் கட்டி வைத்தனா்.

இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமி தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். அவரை மாதா் சங்கத்தின் சாா்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட முத்துலட்சுமிக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில... மேலும் பார்க்க

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய நடவடிக்கை தேவை

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. ... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜய... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய பக்தா்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காசி விஸ்வந... மேலும் பார்க்க

கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த சாலையோர உணவகம்

விராலிமலை தனியாா் தொழிற்சாலை அருகே இயங்கி வந்த சாலையோர உணவகம் தீப்பற்றி எரிந்ததை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி கோல்டன் நகரைச் சேரந்த... மேலும் பார்க்க