ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆ...
தீப்பற்றி எரிந்த சாலையோர உணவகம்
விராலிமலை தனியாா் தொழிற்சாலை அருகே இயங்கி வந்த சாலையோர உணவகம் தீப்பற்றி எரிந்ததை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி கோல்டன் நகரைச் சேரந்தவா் சுந்தா் மகன் மூா்த்தி (28). இவா் விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள தனியாா் தொழிற்சாலை அருகே சாலையோரம் உணவகம் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடித்து, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை கடைக்கு வந்த பாா்த்தபோது இவரது உணவகம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலை அடுத்து, நிகழ்விடம் வந்த தீயணைப்பு வீரா்கள், நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.