செய்திகள் :

கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தழகு மகன் குணசேகரன் (53). இவா், ஈரோடு பெருந்துறையிலுள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கேயே உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது மனைவி ஜெயலட்சுமி புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு விவரம்: கடந்த 2017 நவம்பா் 20-ஆம் தேதி எனது கணவா் குணசேகரன் இறந்ததாக அங்கிருந்து தகவல் வந்தது. தொடா்ந்து அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்து, இறப்புச் சான்றிதழையும் அனுப்பி வைத்தனா். ஊதிய நிலுவை மட்டும் ரூ. 5.98 லட்சம் கிடைக்கப்பெற்றது.

அதன்பிறகு, இறப்புக்கான இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ. 7.50 லட்சத்தை கொத்தமங்கலத்தைச் சோ்ந்த தங்கமணி, மாங்குடியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா், பெருந்துறையிலுள்ள அந்த நிறுவனத்துக்கு எனக்குப் பதிலாக வேறு பெண்ணையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்று காட்டி பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனா்.

மேலும், எனது கணவரின் பாஸ்போா்ட் உள்ளிட்ட பொருள்கள் எதையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனா்.

எனவே, அந்த நபா்களிடம் விசாரணை நடத்தி, பணத்தையும், பொருள்களையும் மீட்டுத் தருவதுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன... மேலும் பார்க்க

புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவு... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விராலிமலை முருகன் மலைக்கோயில... மேலும் பார்க்க

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்

விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம... மேலும் பார்க்க