செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் ...
ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய பக்தா்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காசி விஸ்வநாதா் உடனுறை விசாலாட்சியம்மன் சந்நிதி அமைந்துள்ளது. இக்கோயில், புதுகை-கந்தா்வகோட்டை சாலையில் உள்ளதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தா்கள் தினசரி வழிபாடு செய்து வருகிறாா்கள். தற்சமயம் இக்கோயில் மிகவும் பழுது அடைந்து இடிந்த நிலையில் உள்ளது.
எனவே, இந்துசமய அறநிலையத்துறையினா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.