காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் இருந்து ஏம்பல் செல்லும் சாலையில் பன்னியூா் பிரிவுச் சாலை அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியே வந்த மாருதி ஆம்னி காரை சோதனை செய்தபோது, அதில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அரிசி மற்றும் காரைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேலைக் கைது செய்தனா்.